இந்து சமய அறநிலையத்துறையில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிங்க!!
TNHRCE Vanchinatha Swami Recruitment 2024
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
TNHRCE Vanchinatha Swami Recruitment 2024 இந்து சமய அறநிலையத்துறையில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஓதுவார், பரிசாரகர் பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
![TNHRCE Vanchinatha Swami Recruitment 2024](https://bossinfo.in/wp-content/uploads/2024/03/TNHRCE-Vanchinatha-Swami-Recruitment-2024.png)
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
பணியின் பெயர் | ஓதுவார், பரிசாரகர் |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.03.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE காலிப்பணியிடங்கள்:
ஓதுவார், பரிசாரகர் பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓதுவார் கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
TNHRCE வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓதுவார் ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,700/- முதல் ரூ.10,700/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.03.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.