பொது விடுமுறை குறித்து ஐகோர்ட் புதிய உத்தரவு
High Court new order on Ram Navami public holiday
High Court new order on Ram Navami public holidayஅயோத்தி ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொது விடுமுறை தமிழகத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகிறது .இது தொடர்பாக வெளியான செய்தி என்னவென்றால்ஸ்ரீ ராமநவமி சிவராத்திரி ஆகிய நாட்களில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கடலூரை சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா ஹை கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![High Court new order on Ram Navami public holiday](https://bossinfo.in/wp-content/uploads/2024/01/High-Court-new-order-on-Ram-Navami-public-holiday.png)
பொது விடுமுறை கோரிக்கை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொது விடுமுறை தொடர்பான அரசின் முடிவுகளில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்று கூறிவிட்டனர் .மேலும், இது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்குமாறு கூறிய வழக்கை முடித்து வைத்தனர்.
ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .இந்த கோரிக்கையானது புதிய நீதி கட்சி சார்பாக தமிழக அரசை டாக்டர் ஏசி சண்முகம் நிறுவன தலைவராக இருக்கின்ற புதிய நீதி கட்சியின் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் .எனவே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்
பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் பெருமுயற்சியில் வருகிற ஜனவரி 22ஆம் தேதி அன்று பகவான் ஸ்ரீ ராமரின் புண்ணிய தலமான அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் நம் அண்டை மாநிலமான புதுச்சேரி உட்படப் பிற மாநிலங்களும் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .