அதிர்ச்சி!! ராக்கெட் வேகத்தில் உயரும் பூண்டின் விலை!!
Garlic Today Rate Tamil Nadu
Garlic Today Rate Tamil Nadu தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அன்றாட உணவின் அத்தியாவசிய காய்கறிகளான தக்காளி வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டது .
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![Garlic Today Rate Tamil Nadu](https://bossinfo.in/wp-content/uploads/2024/02/Garlic-Today-Rate-Tamil-Nadu.png)
அதாவது தக்காளி கிலோ ரூபாய்க்கு 200 வரைக்கும் பச்சை மிளகாய் கிலோ ₹ ரூபாய் 160 சின்ன வெங்காயம் கிலோ 160 முதல் 200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு இதுதான் காய்கறிகளில் உயர்ந்த விலை என்ற நிலைபாட்டில் இருந்ததை இன்று பூண்டு அதையும் தாண்டி நான் தான் அதிக விலையில் விற்கப்படுகிறேன் என்று கூறும் அளவுக்கு காய்கறிகளின் விலை ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை எட்டுகிறது இது நடுத்தர குடும்பத்திற்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் காய்கறி விலைகள் கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது இந்த பூண்டின் விலை மிக அதிக உச்சத்தை எட்டி உள்ளது என்றால் நம்ப முடியவில்லை அதுவும் கிலோ ரூபாய் 350 ரூபாயிலிருந்து ஒரேடியாக ரூபாய் 500க்கு ஒரு கிலோ பூண்டு ஆனது விற்கப்படுகின்றது .இதை யாராலும் நம்ப முடியவில்லை இந்த பூண்டின் விலை 500 ரூபாயில் நிற்குமா அல்லது அதையும் தாண்டி 1000 நோக்கி செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போது இந்த பூண்டின் விலை மிக உயர்வுக்கு காரணமாக கருதப்படுவது என்னவென்றால் பூண்டின் விளைச்சல் மிகவும் குறைவாக காணப்படுகிறது என்றும் பூண்டு மண்டிகள் மூடி இருப்பதாலும் எந்த விலையேற்றம் காணப்படுகின்றது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது .இதேபோன்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை கிலோ 25 ரூபாய்க்கும் விற்ற நிலையில் இன்று 50 கிராம் பூண்டின் விலை அந்த 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 20 மடங்கு இந்த பூண்டின் விலையானது உச்சத்தை அடைந்துள்ளது இதனால் பூண்டை பயன்படுத்தலாமா என்று நடுத்தர குடும்பத்தினரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ளவர்களும் இந்த பூண்டின் விலை கட்டத்தில் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள் என்பது எந்தவித சந்தேகமும் இல்லாமல் தெரிகின்றது.