இனி டிரைவிங் லைசென்ஸ் ஈஸியா வீட்டிலிருந்து வாங்கலாம் தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!!
Driving License Receive Only Post TN Govt Order 2024
Driving License Receive Only Post TN Govt Order 2024 ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![Driving License Receive Only Post TN Govt Order 2024](https://bossinfo.in/wp-content/uploads/2024/02/Driving-License-Receive-Only-Post-TN-Govt-Order-2024.png)
ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்து, வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை இயக்கிக்காட்டி, புகைப்படம், எடுத்துக்கொண்ட பின் அதில் உள்ள அதில் உள்ள முகவரிக்கு விரைவு அஞ்சலில் அனுப்பப்படும்.
ஓட்டுநர் உரிமம் இன்றுமுதல் நேரில் வாங்க முடியாது என்றும் விரைவு அஞ்சலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முதலில் வேண்டும் அதில் குறிப்பிடும் நாள் நேரத்தில் அங்கு சென்று முதலில் ஓட்டுநர் பழகினர் உரிமம் எல்எல்ஆர் எடுத்து ஒரு மாத இடைவேளைக்கு பின் ஓட்டுனர் உரிமம் பெறலாம் வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை ஓட்டி காட்டி போட்டோ எடுத்துக் கொண்ட பின் மாலையில் ஓட்டுநர் உரிமத்தை நேரில் சென்று பெற வேண்டும் .
இதுவே தற்போதைய நடைமுறை இதில் புதிய நடைமுறையாக ஓட்டுனர் உரிமம் வினுப்பதாரரின் வீடுகளுக்கு தபால் அலுவலகம் மூலம் விரைவு அஞ்சலில் செலுத்தப்படும் நடைமுறையானது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது இதனால் விண்ணப்பதாரர் ஒருமுறை சென்று ஓட்டி காட்டி தேர்ச்சி அறிவித்த பின் ஓட்டுனர் உரிமம் பெற இனி ஆலய தேவை இல்லை இதற்காக வழக்கமாக ஓட்டுநர் உரிம கட்டணமாக ரூபாய் 520 உடன் தபால் செலவு ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும்.
இதே நடைமுறையில் ஓட்டுந உரிமம் புதுப்பித்தல் உரிமம் பதிவுச் சான்றிதழ் ஆர்.சி.இ புக் தபால் மூலமே வழங்கப்பட வேண்டும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் முகவரி தவறாக இருந்தாலும் விண்ணப்பதாரர் வீட்டில் இல்லை என்றாலோ ஓட்டுன உரிமம் ஆர்டிஓ அலுவலகத்துக்கே திரும்பி விடும் இச்சுவலில் விண்ணப்பதாரர் அதனை பெற அலுவலகத்திற்கு சென்று சரியான சுய விலாசம் எழுதிய தபால் உரையை அலுவலகத்திக் கொடுக்க வேண்டும் அதனை மீண்டும் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைப்பர்.
விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று (ஆர்.சி. புத்தகம்) அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமத்தை நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்றும், தொலைபேசி எண், முகவரி தவறாக இருந்தால் ஓட்டுநர் உரிமம் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு திரும்ப வந்துவிடும், பின்னர், சரியான முகவரியுடைய தபால் உறையை விண்ணப்பத்தாரர்கள் தந்தால் பின்னர் ஓட்டுநர் உரிமம் தபாலில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள, இந்த புதிய நடைமுறையால், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் வாகப் பதிவுச் சான்று பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வரும் மக்கள் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.