பிரதம மந்திரியின் இலவச வீடு திட்டம் உடனே விண்ணப்பிக்க சரியான நேரம் இது
PM Free House Scheme in Tamilnadu 2024 Apply
வீடு இல்லை என்று கவலையில் இருப்பவர்கள் பிரதம மந்திரியின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி உங்களுடைய கனவை நீங்கள் நிறைவேற்றி கொள்ளலாம். PM Free House Scheme in Tamilnadu 2024 Apply
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அதுவும் மந்திரியின் இலவச வீடு வழங்கும் திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பித்தவுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள உங்களுக்கு சொந்தமான பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் கிராம சபை கூட்டம் எங்கு நடைபெறுகிறதோ அந்த பகுதியில் உங்களுக்கு வீடு தேவை என்பதற்கான விண்ணப்ப படிவத்தையும் அதனுடன் இணைத்து வீடு கட்ட கூடிய இடத்துக்கான பத்திரங்களுக்கான நகல்களையும் உங்களுடைய ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களின் நகல்களை இணைத்து கிராம சபை கூட்டம் நடைபெறும் போது நீங்கள் அளித்தால் உங்களுக்கு அந்த வீடு கிடைப்பதற்கு மிக அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் அதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் ஏற்கனவே நீங்கள் இலவச வீட்டிற்கு விண்ணப்பித்து வீடு இதுவரை உங்களுக்கு ஒதுக்காமல் இருந்தாலும் நீங்கள் தற்போது நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மனு அளித்து அந்த வீடை நீங்கள் பெற்றுக் கொள்ள வழி வகுக்கலாம்.
PM Free House Scheme in Tamilnadu 2024
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மாற்ற அவர்களுக்கு உறுதியான வீடுகளைக் கட்டி வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) என்னும் ஏழைகளுக்கான வீடு திட்டம், 25 ஜூன் 2015 அன்று நாட்டின் ஒவ்வொரு ஏழைக்கும் வீடு வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
பிரதம மந்திரியின் இலவச வீடு திட்டம் 2024
மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை நாட்டில் செயல்படுத்தி வருகிறது. மேலும் 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு இதன் மூலம் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் பலனடைவதற்கு விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் வசிப்பவராகவும், நிரந்தர வீடு இல்லாதவராகவும், 18 வயதிற்கும் மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்கலாம். வாக்காளர் பட்டியலில் விண்ணப்பதாரரின் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பலன் அடைவதற்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
PM Free House Scheme 2024
25 வயதிற்கு மேற்பட்ட கல்வி அறிவற்ற குடும்பம், 16 முதல் 59 வரையிலான வயது வந்த ஆண் உறுப்பினர்கள் இல்லாத குடும்பம், 16 முதல் 59 வயது வரை உள்ள எந்த உறுப்பினரும் இல்லாத குடும்பம், உடல் ஊனமுற்றவர்கள் கொண்டவர்கள் குடும்பம், சாதாரண வேலை மூலம் வருமானம் ஈட்டும், நிலமற்ற குடும்பங்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்ற சிறுபான்மையினர் அனைவரும் பலனடைய முடியும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை எண், புகைப்படம், வேலை அட்டை , வங்கி கணக்கு புத்தகம், ஸ்வச் பாரத் மிஷன் பதிவு எண், தொலைபேசி எண் போன்ற ஆவணங்களை கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் https://pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவச வீட்டிற்காக விண்ணப்பிக்கலாம் அல்லது பொது சேவை மையத்தில் சென்று விண்ணப்பிக்க முடியும்.
Home Page Click