பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு!
School Education Department order to Headmasters
School Education Department order to Headmasters குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி தலைமையாசிரியர்களுக்கு முக்கிய பணியை பள்ளி கல்வித்துறையானது வெளியிட்டுள்ளது .அது என்னவென்றால் ,அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் நாளான குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டங்களில் அரசு அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஊராட்சித் தலைவர் போன்றவர்கள் கலந்து கொள்வார்கள்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இக்கூட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டு தேவை மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும். தற்போது அந்த கிராம சபை கூட்டங்களில் அருகில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜனவரி 26ம் தேதி அன்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டிய முக்கிய பணிகள் குறித்த அறிவுறுத்தல்களை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கல்வித் துறை அறிவுறுத்தல்:
நாட்டின் குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டங்களில் அரசு அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி தலைவர் போன்றவர்கள் கலந்து கொள்வார்கள். இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது தேவை மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும்.
தற்போது மாவட்ட கல்வித்துறை ஆனது கிராம சபை கூட்டங்களில் அருகில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இக்கூட்டத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கூட்டமைப்பை உருவாக்குவது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளிகளை தூய்மையாக பராமரிக்கும் செயல்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.