தமிழகத்தில் நாளை [பிப்-3] சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்!
மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு!..
Tomorrow Feb 3 School Working Day In TamilNadu
Tomorrow Feb 3 School Working Day In TamilNadu தமிழகத்தில் நாளை [பிப்-3] சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்! மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு. தமிழகத்தில் பொதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை பள்ளிகள் செயல்படுவது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவுகளை வெளியிட்டுள்ளார்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
பள்ளி வேலை நாள்:
கொரோனா பெருந் தொற்று ஊரடங்கிற்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட தொடங்கிய போது மாணவர்களின் மனநிலை சீராக இருக்க உதவுமாறு அவர்களின் கல்வி சுமையை குறைப்பதற்கு அனைத்து வார இறுதி சனிக்கிழமை நாட்களிலும் பள்ளிகள் விடுமுறை நாளாக இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இருப்பினும் வார நாட்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் விடுமுறைகள் மற்றும் உள்ளூர் விடுமுறை தினங்களை ஈடு செய்வதற்காக மட்டும் அந்தந்த மாவட்ட வாரியாக சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்ட கல்வி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளும் பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாளாக செயல்படும். மேலும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை திட்டத் தேர்வு (NMMS ) நாளை நடைபெறும் நிலையில் தேர்வுக்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருவது சம்பந்தமாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.