தமிழகத்தில் நாளை [பிப்-2] பள்ளி ,கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வெளியான முக்கிய அறிவிப்பு!..
Tomorrow Local Holiday Tirupur In Tamilnadu
Tomorrow Local Holiday Tirupur In Tamilnadu திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற பிப்ரவரி இரண்டாம் தேதி நடைபெற உள்ளது இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற பிப்ரவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![Tomorrow Local Holiday Tirupur In Tamilnadu](https://bossinfo.in/wp-content/uploads/2024/02/Tomorrow-Local-Holiday-Tirupur-In-Tamilnadu.png)
உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக பிப்ரவரி 3ஆம் தேதி பணி செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 2ஆம் தேதியன்று அரசு அவசர அலுவலகங்களை கண்காணிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவுலகம் மற்றும் சாரநிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி நடைபெற உள்ளது.
![District Collector Tiruppur Kristhuraj](https://pbs.twimg.com/profile_images/1660507774063878144/aTwx87wZ_400x400.jpg)
அன்றைய தினம் அவிநாசி மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார மக்கள் இந்த குடமுழுக்கு நிகழ்வில் பங்கேற்கும் வகையில் உள்ளூர் விடுமுறை வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற பிப்ரவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார். அன்றைய தினம் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 3-ம் தேதி சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.