மார்ச்1-ம் தேதி நடக்கும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து முக்கிய தகவல்!!
12th Public Exam 2024 Update News Tamil
12th Public Exam 2024 Update News Tamil தமிழகத்தில் பொது தேர்வு மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்குகிறது இதில் தொடர்ந்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .தேர்வு நடைபெறுகின்ற போது ஒருநிலை செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதனைப் பற்றிய விரிவான தகவல்களை கீழ் கண்டவற்றுள் காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அது குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
பொதுத்தேர்வு
தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் 10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விரைவில் தொடங்க இருக்கிறது. தேர்வு அட்டவணை முன்னதாக வெளியான நிலையில், நாளை மறுநாள் (மார்ச் 1) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதற்காக மாணவர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுத இருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 3302 மையங்களில் தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை செய்துள்ளது. மேலும் தேர்வு வினாத்தாள் கசியாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் இருக்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட இருக்கிறது. தேர்வின் போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.