ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல்!.. அட்டைதாரர்களுக்கு
மகிழ்ச்சியான செய்தி!!
TN Govt Rules Change For Ration Shop Happy News!
TN Govt Rules Change For Ration Shop ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது ரேஷன் கடைகளில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்று வருவதால் அதை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது என்னவென்றால், மார்ச் மாதம் முதல் ரேஷன் கடைகளில் மின்னணு எடை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .இதன் மூலம் மிகப்பெரிய பயன் நமக்கு கிட்டும் அதைப் பற்றிய விரிவான தகவல்களை கீழ்க்கண்டவனவற்றுள் நாம் காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![TN Govt Rules Change For Ration Shop Happy News!](https://bossinfo.in/wp-content/uploads/2024/01/TN-Govt-Rules-Change-For-Ration-Shop-Happy-News.png)
ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
நூதன திட்டம்:
ரேஷன் கடைகளில் மாதம் தோறும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு தானிய பொருள்களின் எடைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயித்துள்ள எடை மதிப்பீட்டின்படி ரேஷன் கடை ஊழியர்கள் மக்களுக்கு பொருள்களை வழங்குவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த வண்ணம் உள்ளது. இதனை அடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேஷன் கடைகளில் இனி மின் எடை இயந்திரம் மூலமாகவே பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டின் முழு மதிப்பு பொருள்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இது மேலும், கருப்பு சந்தைகளில் ரேஷன் பொருள்களின் வரவும் கட்டுப்படுத்தப்படும். இத்திட்டம், குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும், மார்ச் மாதம் முதல் மின்னணு எடை இயந்திரம் இ பாஸ் இயந்திரங்களுடன் இணைக்கப்படும். உரிய அளவு ரேஷன் இருந்தால் மட்டுமே இதற்கான சீட்டு பெறப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தத் திட்டம் மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.