TNPSC Group 4 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி தமிழக அரசு அறிவிப்பு!..
TN Govt Free Coaching For TNPSC Group 4 Classes
TN Govt Free Coaching For TNPSC Group 4 Classes படித்த இளைஞர்கள் அனைவரும் வேலை பெரும் நோக்கத்தோடு TNPSC Group 4 போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![TN Govt Free Coaching For TNPSC Group 4 Classes](https://bossinfo.in/wp-content/uploads/2024/01/TN-Govt-Free-Coaching-For-TNPSC-Group-4-Classes.png)
மத்திய அரசு மற்றும் மாநில அரசு பணிகளுக்கான TNPSC Group 4 போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் இந்த போட்டி தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தி என்னவென்றால், TNPSC Group 4 நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரியில் 500 இடங்களுக்கும் ,சென்னை சேப்பாக்கம் மாநிலக்கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்க்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது .பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 6 மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வாக தேர்வர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது 01.01. 2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் .மேலும், போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் அனைவரும் https://www.cecc.in/ வாயிலாக 29 .01 .2024 முதல் 12.2.2024 வரை விண்ணப்பிக்கலாம் .கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் மேலும் விபரங்களுக்கு ஆகிய தொலைபேசி
044 – 25954905 மற்றும் 044 – 28510537
எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்கள் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.