ரூ.300 கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு?.. வெளியான முக்கிய செய்தி!
Rs.300 Gas Cylinder Price Reduction
Rs.300 Gas Cylinder Price Reduction நம் நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இன்று கேஸ் அடுப்பு தான் பயன்பாட்டில் உள்ளது மத்திய அரசு கேஸ் ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைந்து எரிவாயு நுகர்வோருக்கு சிலிண்டர்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. எரிவாயு விலைகள் நகரத்திற்கு ஏற்ப மாறுபடும் .ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கேஸ் விலை அதிகரித்து சாமானியர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![Rs.300 Gas Cylinder Price Reduction](https://bossinfo.in/wp-content/uploads/2024/01/Rs.300-Gas-Cylinder-Price-Reduction.png)
இந்நிலையில் மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து சில அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சனையை கிளப்பி வருகின்றன .மத்திய அரசுடன் சில மாநிலங்களும் கேஸ் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஈடுபட்டுள்ளன ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிலிண்டர் வழங்கப்படும் என விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் மோடியின் அரசு எரிவாயு விலையில் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .விரைவில் எல்பிஜி தொடர்பான பெரிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கவரும் வகையில் எரிவாயு விலையை குறைக்க அரசு முயற்சித்து வருகிறது. தகுதியான ஏழை குடும்பங்களுக்கு குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டர் விலை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உபயோக கேஸ் சிலிண்டர்விலை மத்திய அரசு ரூபாய் 200 குறைத்தது. அதன் பிறகு மேலும் 100 குறைக்கப்பட்டது .
மத்திய அரசின் இந்த முடிவுகளுக்கு பிறகு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் ரூபாய் 960 க்கு மானிய விலை சிலிண்டர்களை பெறுகின்றனர் .இந்நிலையில் ஏழைக் குடும்பங்களுக்கான மானியத் தொகையை உயர்த்தி மத்திய அரசு முடிவெடுக்கப் போவதாக கூறப்படுகிறது .இந்த மானியம் 300 வரை இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசு விரைவில் வெளியிடும் என தெரிகிறது.
ரூ, 300 மானியம் வழங்கினால் மானிய விலை எரிவாயு சிலிண்டரின் விலை ₹660 க்கு வருகிறது இவ்வளவு பெரிய தள்ளுபடி வழங்கப்படுமா? என்ற விவாதம் நடந்து வருகிறது .தற்போது நாட்டில் எல்பிஜி நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 30 கோடியாக உள்ளது 2025 இல் இருந்து 2026 ஆம் ஆண்டுக்குள் மேலும் 75 லட்சம் LPG இணைப்புகள் வரும் என்று கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்டது. சமீப காலமாக மானிய சிலிண்டர்கள் குறித்து அரசு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த அளவுக்கு சலுகைகள் விஷயத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன மத்திய அரசு ரூபாய் 300 மானியம் அறிவித்தால் அது பாஜகவுக்கு தேர்தல் பிளஸ் ஆக இருக்கும் என தெரிவிக்கின்றன.