இனி 500 ரூபாய்க்கு சிலிண்டர் முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! 500 Rupees Only LPG Gas CM Announced

இனி 500 ரூபாய்க்கு சிலிண்டர் முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

500 Rupees Only LPG Gas CM Announced

500 Rupees Only LPG Gas CM Announced சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ரூபாய் ஆயிரத்தை நெருங்கும் அளவில் இருப்பதால் தினசரி கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தும் ஏழ்மையான குடும்பங்கள் முதல் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்பங்கள் வரை தங்களது பட்ஜெட் தொகையில் சிலிண்டருக்கான தொகையை அதிகமாக எடுத்து வைக்கும் நிலையில் இருந்தது. தற்போது பாதி விலையில் மானியமாக கிடைக்கும் வகையில் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்றும்  மீதித்தொகையை மானியமாக வழங்க அரசனது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது இதைப் பற்றி நாம் முழுமையாக பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
500 Rupees Only LPG Gas CM Announced
500 Rupees Only LPG Gas CM Announced

 

மகாலட்சுமி என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வெறும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசு நிர்வாகத்தில் தனி முத்திரை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்துக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் மேலும் இரண்டு உத்தரவாதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மகாலட்சுமி யோஜனா திட்டம்.

தெலங்கானாவில் இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் மகாலட்சுமி திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த விலைக்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும். அதாவது, வெறும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும். இதற்கான மானிய உதவியை அரசே நேரடியாக வழங்குகிறது. இத்திட்டம் இல்லத்தரசிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

500 Rupees Only LPG Gas CM Announced

தேஜஸ்வி எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கும் இந்த திட்டம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தெலுங்கானா சிவில் சப்ளைஸ் அதிகாரிகள் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். கேஸ் சிலிண்டர் வழங்கும் போது பயனாளிகள் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். அதன் பிறகு 500 ரூபாய் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தினார். மறுபுறம், திட்டத்தை உடனடியாக செயல்படுத்த 80 கோடியை விடுவிக்க அனுமதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்றாலும் பொதுமக்களின் நலன் கருதி இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாலட்சுமி திட்டத்தின் ஒரு பகுதியாக 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கான அறிவிப்பை தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் கேஸ் சிலிண்டருக்கு மூன்று நிபந்தனைகளை அரசு அறிவித்துள்ளது. மானிய சிலிண்டருக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியல் அடிப்படையில் 39.5 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு தகுதியுடையர்கள் என்று அரசு அறிவித்துள்ளது. மூன்றாண்டுகளின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு அதன் சராசரி சிலிண்டர்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிலிண்டர் ஒதுக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் முதலில் முழுத் தொகையையும் செலுத்தி சிலிண்டரைப் பெற வேண்டும். அதன் பிறகு, மானியத் தொகை பயனரின் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும். எண்ணெய் நிறுவனங்களுக்கு எரிவாயு மானியத்தை அரசே நேரடியாக வழங்கும். அந்த நிறுவனங்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்தப்படும்.

இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு கண்காணிக்கும். மானியத் தொகையை 48 மணி நேரத்திற்குள் பயனரின் கணக்கில் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!