இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் அறிமுகமாகுமா?.. மத்திய அரசு முடிவு!..
Plastic Money News In Tamil 2024
Plastic Money News In Tamil 2024 பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக மாநிலங்களவையில் அமைச்சர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளை நாம் விரிவாக கீழ்க்கண்டவற்றுள் காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![Plastic Money News In Tamil 2024](https://bossinfo.in/wp-content/uploads/2024/02/Plastic-Money-News-In-Tamil-2024.png)
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்:
2023 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் 2000 நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் மூலமாக பறிமுதல் செய்யப்படுவது குறித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் மாதம் முதல் முழுவதுமாக 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் தான் நாட்டின் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது. நடந்து வரும் மாநிலங்களவை கூட்டத்தில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கு சவுத்ரி அவர்கள் பதில் அளித்துள்ளார்.
அதில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை தடுக்கும் வகையிலும், அதிக காலம் புழக்கத்தில் இருக்கும் வகையிலும் ரூபாய் நோட்டுகளை தயார் தரம் உயர்த்துவது தொடர்பாக நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனால் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து ஒரு தொடர்பான எந்த முடிவும் இதுவரை அரசு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் கிரிப்டோ கரன்சி போன்ற தடை செய்யப்பட்டுள்ள நிதி சார்ந்த வர்த்தகங்களை மேற்கொள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2022 – 23 ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு ரூபாய் 4682.80 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு செலவானதாகவும் தெரிவித்துள்ளார்.