மகிழ்ச்சி பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் தேதி அறிவிப்பு!..
School Students Free Laptop Good News
School Students Free Laptop Good News அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசு முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது அதிலும் குறிப்பாக அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கிலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக அனைத்து வகையான திறன்களையும் பெற்றிட வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாக உள்ள காரணத்தினால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு பள்ளியை தரம் உயர்த்தும் நோக்கில் பல்வேறு கல்வி உதவித்தொகை மற்றும் சிறப்பு சலுகைகளை அளித்து வருகின்றது.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அதிலும் குறிப்பாக தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்களுக்கு பல்வேறு வகையான திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் பல நலத்திட்டங்களை கொண்டு வந்து மாணவர்கள் கல்வி கற்கும் திறனை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகின்றது.
மாணவர்களுக்கு இலவச சீருடை இலவச பாட புத்தகம் இலவச புத்தகப் பைகள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கி வருகின்றனர்.
11 12 ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு அரசின் சார்பாக கல்வி உதவித் தொகையும் இலவச மிதிவண்டி மற்றும் இலவச லேப்டாப் வழங்கும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் மாணவர்கள் பள்ளி படிப்பு முடிக்கும் தருவாயிலேயே மிதிவண்டி மற்றும் லேப்டாப்புகள் வழங்கப்பட்டு வந்தன ஆனால் இந்த புதிய அரசாங்கம் இதுவரை எப்போது லேப்டாப் வழங்கும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜன.25 முதல் இலவச லேப்டாப் வழங்கப்பட இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இலவச லேப்டாப்:
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000 வழங்கப்பட்டதால் உபயோகமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதே போல, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பொதுமக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.500 வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், மீண்டும் ஒவ்வொரு பொதுமக்களின் வங்கி கணக்கிலும் கூடுதலாக ரூ.250 வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, வரும் ஜன.25 ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.