சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 கல்வித் தகுதி 10th
Chennai High Court Job Notification Apply 2024
Chennai High Court Job Notification Apply 2024 சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![Chennai High Court Job Notification Apply 2024](https://bossinfo.in/wp-content/uploads/2024/01/Chennai-High-Court-Job-Notification-Apply-2024.png)
ஓட்டுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை :
13
கல்வித் தகுதி :
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் :
ரூ. 19,500 – 71,900
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
13.02.2024
விண்ணப்பக் கட்டணம்: ரூ 500, எஸ்.சி, எஸ்.சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.3%20of%202024%20dt.15.01.2024%20in%20TAMIL.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு
மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவின் அனைத்து ஆட்சேர்ப்புகளும் தகுதி அடிப்படையில் நடத்தப்படுகிறது.
நேர்மையற்ற முறையில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து ஏமாற்றும் மோசடியாளர்கள் மற்றும் தரவர்களிடமிருந்து விண்ணப்பதாரர்கள் தங்களை காத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறான நேர்மையாற்ற நபர்களால் விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டு அதனால் அவர்களுக்கு உண்டாகும் கஷ்ட நஷ்டங்களுக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.
விண்ணப்பதாரர் அபார நியாயமற்ற முறையில் வேலை பெறுவதற்கு நேரடியாகவோ அல்லது வேறு நபர் வாயிலாகவோ ஆட்சேர்ப்பு பிரிவு அணுகினால் அவர் வேலை பெரும் தகுதியை இழந்து விடுவார்.
இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விவரங்களுக்கும் விண்ணப்பதாரரை பொறுப்பாவார் இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது தவறான தகவல் தரப்பட்டிருந்தால் அதற்கு இணையதள சேவையாகும் அல்லது பொது சேவை மையங்கள் உள்ளிட்ட சேவை வழங்குவோரை குறை கூற இயலாது .ஒரு முறை சமர்ப்பிக்க இணையதள விண்ணப்பத்தினை மீண்டும் திருத்த முடியாது .ஆகையால் விண்ணப்பதாரர்கள் இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பதற்கு முன்பு தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கவனமுடன் சரி பார்த்து அதன் பின் சமர்ப்பிக்கவும்.