பெண்களுக்கு மாதம் ரூ.2500 வெளியான
மகிழ்ச்சி செய்தி!..
2500 per month for women In State Govt Plan
2500 per month for women In State Govt Plan பெண்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கும் திட்டமானது பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது முன்னுதாரணமாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு அதுவும் குறிப்பாக குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது .அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது எந்த நடைமுறையை தற்போது பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த உடன் கடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையானது தகுதியுள்ள குடும்ப தலைவிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்ப தலைவிகள் எந்த ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெற்று வருகின்றன .இதனை முன் உதாரணமாக கொண்டு தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் 2500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு திட்டங்களும் மக்கள் மத்தியில் அரசின் மேல் நன்மதிப்பை ஏற்படுத்தி உள்ளது. திட்டங்கள் குறித்தான விவரங்களை இப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அரசின் திட்டங்கள்:
தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்று தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது. அரசு ஆட்சி அமைத்தவுடன் பல்வேறு சிறப்பு திட்டங்களையும் உடனடியாக அமல்படுத்த தொடங்கியது. அதன்படி, பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 2500 நிதி உதவியும், இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000, ரிதுபரேசா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ. 12000மும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதனை தவிர, கிரக ஜோதி திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்தினருக்கும் 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இந்திரம்மா வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவியும், செயல்வீரர்களுக்கு 250 சதுர அடி நிலமும் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு யுக விகாஸ் திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் கல்வி காப்பீடு அட்டை, முதியவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ரூபாய் 4000 ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் விரைவில் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.