10 12-ம் வகுப்பு பொது தேர்வு ஆண்டுக்கு இருமுறை மாநில அரசு உத்தரவு!!
10th 12th Class Public Examination Twice a Year State Government Order
10th 12th Class Public Examination Twice a Year State Government Order மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின்படி பொது தேர்வு எழுதும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு எழுதும் போது அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாவதாகவும் எனவே மாணவர்கள் ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுதும் நடைமுறையை மத்திய கல்வி வாரியம் சிபிஎஸ்சி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுதும் முறையை மாநில அரசுகளும் தற்போது கொண்டு வர அனுமதி அளித்து வருகின்றன இந்த தகவலை நாம் முழுமையாக பார்க்கலாம்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![10th 12th Class Public Examination Twice a Year State Government Order](https://bossinfo.in/wp-content/uploads/2024/02/10th-12th-Class-Public-Examination-Twice-a-Year-State-Government-Order.png)
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான மாநில வாரியத் தேர்வுகளை ஒரே கல்வி அமர்வில் இருமுறை நடத்த சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
ஒரே கல்வி அமர்வில் இருமுறை தேர்வு:
பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பின் படி, ஒரே கல்வி அமர்வில் இருமுறை தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி, முதல் கட்டத் தேர்வு மார்ச் மாதத்திலும், இரண்டாம் கட்டத் தேர்வு ஜூலையிலும் நடைபெறும். 2025-26 ஆம் ஆண்டு கல்வி அமர்வில் இருந்து மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை எழுத வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின் (NCF) படி, மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு போதுமான நேரமும் வாய்ப்பும் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகள் நடத்தப்படும். அதிக மதிப்பெண்களை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பையும் இதன் மூலம் மாணவர்கள் பெறலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.