கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை மாநில அரசு முடிவு!!..
Rs.10000 Scholarship for College Students State Government Decision
Rs.10000 Scholarship for College Students State Government Decision தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது இதனை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் பல நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![Rs.10000 Scholarship for College Students State Government Decision](https://bossinfo.in/wp-content/uploads/2024/02/Rs.10000-Scholarship-for-College-Students-State-Government-Decision.png)
கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு மாநில அமைச்சரவையானது ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து மாநில முதல்வர் அமைச்சரவையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
உதவி தொகை:
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் கடந்த சில நாட்களாக அமைச்சரவை கூட்டம் நடந்து வருகிறது. இதில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான உதவி தொகை திட்டம் ஒன்றை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்களுக்கு நூதனா உன்னத அபிலாஷா என்ற உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
திட்டத்தின் படி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 9000 மற்றும் மாணவிகளுக்கு ரூபாய் 10,000 நிதி உதவி வழங்கப்படும். எஸ்சி, எஸ்டி மற்றும் கட்டுமான தொழிலாளியின் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ரூபாய் 10,000, அதே பிரிவை சேர்ந்த மாணவிகளுக்கு ரூபாய் 11000 வழங்கப்படும். மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 2023 முதல் 2026 ஆம் ஆண்டு வரை இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.385 கோடி தொகை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.