மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!..
Magalir Urimai Thogai CM Announcement Feb 15
Magalir Urimai Thogai CM Announcement Feb 15 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று சுமார் 1,15,16,292 குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது .
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![Magalir Urimai Thogai CM Announcement Feb 15](https://bossinfo.in/wp-content/uploads/2024/02/Magalir-Urimai-Thogai-CM-Announcement-Feb-15.png)
மேலும் ஒரு லட்சம் பேரில் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். காலை உணவு திட்டத்தில் 16 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு இன்று காலையிலிருந்து மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 வங்கி கணக்கில் வர வைக்கப்படுகிறது .இதற்கான குறுஞ்செய்தி பெண்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படுகிறது .
இதில் இன்னும் சில பேருக்கு ரூபாய் 1000 வரவில்லை அவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் .ஒரே நேரத்தில் அனைவரும் பணம் செலுத்த முடியாது .எனவே இன்று மாலைக்குள் அனைவரின் வங்கி கணக்கிலும் பணம் வந்துவிடும்.