அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!..உடனே படிங்க?..
Important notice to all bank customers
Important notice to all bank customers வங்கி வாடிக்கையாளர்களாக இருக்கும் அனைவரும் இந்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் அத்தகவலை பற்றி கீழ்க்கண்டவற்றுள் விரிவாக காணலாம்.இது ஒரு அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![Important notice to all bank customers](https://bossinfo.in/wp-content/uploads/2024/01/Important-notice-to-all-bank-customers.png)
வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு
மக்கள் அனைவரும் பெரும்பாலும் பல்வேறு வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ளனர். ஒவ்வொரு தேவைக்காகவும் தொடங்கப்பட்ட கணக்குகள் என்று பல கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை ஒரு சிலர் முறையாக பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர். தற்போது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஷாக் அளிக்கும் தகவல் குறித்து காணலாம். அதாவது வங்கி கணக்கை வைத்திருக்கும் நபர் உயிருடன் இருக்கும் வரை மட்டுமே அந்த தொகை அவருக்கு சொந்தமானதாகும். எதிர்பாராத விதமாக அந்த நபர் இறந்துவிட்டால் அவரின் குடும்பத்தாருக்கு அவரது வங்கி தொகை செல்வதில் சில சிக்கல்கள் உள்ளது. அதாவது வங்கி கணக்கு திறக்கும்போது நாமினி விவரங்களை நாம் முறையாக பதிவு செய்ய வேண்டும்.
முக்கிய அறிவிப்பு
நாமினியை பதிவு செய்யாத பட்சத்தில் நமது மரணத்திற்கு பிறகு அந்த கணக்கில் இருந்து தொகையை எடுக்க முடியாமல் போகிறது. இந்த தொகை முழுவதும் கோரப்படாத தொகையாக கருதப்பட்டு வருகிறது. மேலும் வங்கிகள் அனைத்தும் கேஒய்சி சரிபார்ப்பை அவ்வப்போது செய்து வாடிக்கையாளர்களிடம் கணக்கை முறையாக பராமரிக்க தெரிவிக்க வேண்டும். குறிப்பாக உங்களது வங்கி கணக்குகளை ஒழுங்குப்படுத்தி தேவையற்ற கணக்குகளை முறையாக மூடலாம். இதன் மூலம் நிதி நிர்வாகம் எளிதாக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எந்த வகையான திட்டமாக இருந்தாலும் இது தொடர்பான ஆவணங்களை நாம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஆவணங்களின் விவரங்களை குடும்பத்தினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் நமக்குப் பிறகு அந்தத் தொகையை குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்த முடியும்.