ஜனவரி 26 ஆம் தேதி முதல்வர் முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார்?
Chief Minister to make major announcement on January 26
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
Chief Minister to make major announcement on January 26 ஜனவரி 26 ஆம் தேதி முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார். அது என்னவென்றால் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை மொத்தம் 43 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது அந்த மாவட்டங்களின் எண்ணிக்கை மற்றும் அதனுடைய விவரத்தை பற்றி ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் முதல்வர் அவர்கள் தெரிவிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
![Chief Minister to make major announcement on January 26](https://bossinfo.in/wp-content/uploads/2024/01/Chief-Minister-to-make-major-announcement-on-January-26.png)
Chief Minister to make major announcement on January 26
மாவட்டங்களின் எண்ணிக்கை:
தமிழகத்தில் தற்போது மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக ஐந்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 5 புதிய மாவட்டங்கள் தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டில் உருவாக உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் முதல்வர் தெரிவிப்பார். இதன்பிறகு தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 43 ஆக உயரும்.
அரசு அறிவிப்பின்படி கடலூர் மாவட்டம் இரண்டாக பிரிந்து விருத்தாச்சலம் மாவட்டம் புதியதாகவும், திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாகப் பிரித்து செய்யாறு மாவட்டம், கோயம்புத்தூர் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாம் பிரித்து கும்பகோணம் மாவட்டம், சேலம் மாவட்டம் இரண்டாகப் பிரித்து ஆத்தூர் மாவட்டம் என்று 5 புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளது. மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் அரசின் மேலாண்மை பணிகள் எளிதாக்கப்பட்டு பணிகள் விரைவாக நடக்க உறுதுணையாக இருக்கிறது.
புதிய மாவட்டங்களின் தாலுகா விபரங்கள் அனைத்தும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
விருத்தாச்சலம் மாவட்டம்:
விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர்.
செய்யாறு மாவட்டம்:
ஜமுனாமரத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, வெண்பாக்கம், வந்தவாசி.
பொள்ளாச்சி மாவட்டம்:
கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம்.
கும்பகோணம் மாவட்டம்:
கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர்.