மாதம் 300 யூனிட் இலவசம் மின்சாரம் பெரும் வாய்ப்பை தவற விட வேண்டாம் !! எங்கே விண்ணப்பிப்பது? முழு விவரம்
Monthly 300 unit free Electricity how to apply in tamil
மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் பெற எங்கே விண்ணப்பிக்க வேண்டும் Monthly 300 unit free Electricity how to apply in tamil
வீடுகளுக்கு சோலார் பேனல் திட்டத்தில் (சூரிய மின்சக்தி திட்டம்) இணைய விருப்பம் உள்ளவர்கள் அஞ்சலகத்தில் பதிவு செய்ய அஞ்சல் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மாதம் 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என மத்திய அரசாணது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்து இருந்தார்கள் அந்த திட்டத்தில் இணைய விரும்புவர்கள் உங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தில் சென்று நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் இது தொடர்பாக அஞ்சலக அலுவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் அதைப்பற்றி நாம் முழுமையாக பார்க்கலாம்.
வீடுகளில் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து மக்கள் பயன்படுத்த முடியும் என்ற நிலையில், அவர்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற திட்டத்தை மத்திய அரசுஅறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் இணைவோர் தங்களது வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதுடன், உபரி மின்சாரத்தை மின் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை ஒவ்வொரு குடும்பத்தினரும் மிச்சப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.
இத்திட்டம் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் உதவும். இத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ள பொதுமக்களின் விவரங்களை சேகரிக்கும் பணியைமேற்கொள்ள அஞ்சல் துறையில்பணிபுரியும் அனைத்து அஞ்சல்காரர்களையும் மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது. எனவே, அனைவரும் இந்த வாய்ப்பை பெற அருகில் உள்ள அஞ்சலகத்தை தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.